காதலி சொன்ன அந்த வார்த்தை : கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை!!

547

தமிழகத்தில் காதலி திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரத்தில் காதலன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவி

காதலி சொன்ன அந்த வார்த்தை : கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை!!

தமிழகத்தில் காதலி திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரத்தில் காதலன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இ.ரெட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகளான பொன் மகாலட்சுமி துாத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இவரும் அதே ஊரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகன் மதன்குமார் மதுரை சட்டக்கல்லுாரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருபவரும் பள்ளி பருவத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென்று முத்துப்பாண்டி மகாலட்சுமியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் காதலியின் நினைவில் இருந்த அவர் சமீபத்தில் மகாலட்சுமியை சந்தித்து நான் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட மகாலட்சுமியோ நேரத்துக்கு ஒரு பேச்சு பேசும் நீ எனக்கு வேண்டாம் எனக்கு ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி சம்பவ தினமான நேற்று பிற்பகல் வேளையில் மகாலட்சுமி தண்ணீர் பிடித்து சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளார்.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் மகாலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

காதலியை குத்தி கொலை செய்த முத்துப்பாண்டி தன்னுடைய வீட்டிற்கு சென்று சேலையை கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.