அதிர்ஷ்டமாக கிடைத்த கோடிக்கணக்கான பணம் : நால்வருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

666

இலங்கையில் இருந்து பல கோடி அமெரிக்க டொலர் தொகை ஒன்றை சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டரை கோடி 75 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பணத்தை இந்தியாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்த நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனா மற்றும் நேபாளம் நாட்டவர்கள் நால்வர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீன நாட்டவர்கள் இருவரும் 30 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும், நேபாளம் நாட்டவர்கள் 20 மற்றும் 25 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை 5.40 மணியளவில் இந்தியாவின் முப்பாய் நோக்கி செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அவர்களால் கொண்டு வரப்பட்ட பயணப்பை மற்றும் அணிந்து வந்த ஆடைகளில் 169,900 அமெரிக்க டொலர்களை மறைத்து வைத்திருந்த நிலையில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நால்வரும் இலங்கையில் கெசினோ விளையாட வந்தவர்கள் எனவும், அவர்கள் வெற்றி பெற்ற பெருந்தொகை பணத்தை இலங்கையில் இருந்து கொண்டு செல்லும் போது விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.