வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்!!

773


வவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் இன்று (17.07.2018) காலை 8.30 மணியளவில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், வவுனியா நகரசபை நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம் சமூக சேவை அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சோமசுந்தரப்புலவரின் நினைவுரையினை தமிழ்மணி அகளங்கள், தமிழருவி சிவகுமரன் நிகழ்த்தியதுடன் வவுனியா விபுலானந்தக்கல்லூரி மாணவர்களின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை பாடசாலைப்பாடியதுடன் சோமசுந்தரப்புலவரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் ஆடிப்பிறப்பை முன்னிட்டு ஆடிக்கூழ், கொளுக்கட்டை பரிமாறப்பட்டது.



இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் , வவுனியா நகரசபை உறுப்பினர்கள், வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் , பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், செயலாளர் மாணிக்கம் ஜெகன், ஆட்டோ உரிமையாளர் சங்கத்தலைவர் ரவி, வர்த்தக சங்க உறுப்பினர்கள், நகரசபை ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள் விபுலானந்தாக்கல்லூரி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.