வவுனியாவினை வந்தடைந்த ஐம்பது நோயாளர் காவுவண்டிகள்!!

382

வடமாகாண மக்களின் நலனை கருத்தில் கொண்டு இலவச நோயாளர் காவு வண்டி சேவையினை செயற்படுத்த வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் திட்டமிட்டிருந்தார்.

அந்த வகையில் கொழும்பிலிருந்து புறப்பட்ட ஐம்பது நோயாளர் காவு வண்டிகள் நேற்று (18.07.2018) மாலை வவுனியாவை வந்தடைந்தன. பின்னர் இரவு 8 மணியளவில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் நாளையதினம் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இவ் வண்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் 21 நோயாளர் காவு வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளன. மிகுதி 29 நோயாளர் காவு வண்டிகள் ஊவா மாகாணத்தில் சேவையில் ஈடுபடவுள்ளன.

வவுனியாவில் மூன்று, மன்னாரில் மூன்று, முல்லைத்தீவில் மூன்று, மாங்குளத்தில் இரண்டு, கிளிநொச்சியில் நான்கு, யாழ்ப்பாணத்தில் ஏழு நோயாளர் காவு வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

24 மணிநேரமும் நோயாளிகள் 1990 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு நோயாளர் காவு வண்டி சேவையினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.