வவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது!!

302

வவுனியாவில் நேற்று இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது தமது உடமையில் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரும் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருக்குக்கடைத்த தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது வவுனியா சுற்றுவட்ட வீதியில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் 40 மில்லி கிராம் ஹெரோயின்போதைப் பொருளை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினத்தில் மரக்காரம்பளை மதுபான நிலையத்திற்கு அருகில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரது உடமையில் 70 மில்லிக் கிராம் போதைப் பொருளினை வைத்திருந்ததாகத் தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.