பிரபல தமிழ் நடிகை தற்கொலை செய்தது ஏன் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

387

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா நேற்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்த இவர், கூடைப்பந்து வீரர் அருண்பாலாவை கடந்த சில ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், நேற்று காலை பிரியங்காவின் வீடு திறக்கப்படவில்லை. இதனால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கதவைத் தட்டினர். ஆனால் அவர் திறக்கவில்லை. இதனால், ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தபோது, படுக்கையறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த பொலிசார் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், பிரியங்காவுக்கு குடும்பத்தில் சில பிரச்னைகள் இருந்தது தெரியவந்துள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, அவர் மன வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், திருமணம் முடிந்து இதுநாள் வரை பிரியங்காவுக்கு குழந்தை இல்லை. இதுவும் அவரின் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர். இருப்பினும், பிரியங்காவின் குடும்பத்தினர் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.