தற்கொலை செய்து கொண்ட அழகிய இளம்பெண் : வழக்கில் திடீர் திருப்பம்!!

425


டெல்லியில் விமானப் பணிப்பெண்ணான அனிசியா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியின் பஞ்சசீல் பார்க் பகுதியை சேர்ந்தவர் அனிசியா பத்ரா, ஜேர்மன் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த அனிசியா, கம்ப்யூட்டர் இன்ஜினியரான மயாங்க் சிங்வியை 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.



திருமணம் ஆனதிலிருந்தே வரதட்சணை கேட்டு அனிசியாவை, மயாங்க் கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் தொடர் பிரச்சனை இருந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் வீட்டின் மாடியிலிருந்து குதித்து அனிசியா தற்கொலை செய்து கொண்டார்.



இதற்கு முன்பாக மயாங்குக்கு, எனக்கு வாழ பிடிக்கவில்லை, தற்கொலை செய்ய போகிறேன் என மெசேஜ் அனுப்பியுள்ளார்.



இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அனிசியாவின் பெற்றோர்கள் மயாங்க் தன் மகளை கொன்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிசார் மயாங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.