நடிகை பிரியங்கா இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாளே என கண்கலங்கிய பிரபல நடிகை!!

313

பிரபல சீரியல் நடிகையான பிரியங்காவின் தற்கொலை தான் தற்போது மிகவும் பரபரபபாக பேசப்பட்டு வருகிறது. எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

இருப்பினும் பொலிசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வம்சம் சீரியலில் அவருடன் நடித்த நடிகை கிருத்திகா கூறுகையில், படபிடிப்பு தளத்தில் ரொம்ப சுட்டியான பொண்ணு பிரியங்கா. விஜேவாக இருந்ததால் அந்தக் கலகலப்பும் துருதுருப்பும் எப்பவும் அவளிடம் இருக்கும்.

ஒரு நிமிடம்கூட அவளால் அமைதியா இருக்கவே முடியாது. அவளுக்கும் தனிப்பட்ட பிரச்னைகள் இருந்துச்சு. எல்லா வீடுகளிலும் இருக்கும் கணவன் – மனைவி பிரச்னைதான்.

ஆனாலும், அவள் என் மாமா இல்லைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் அக்கா’னு சொல்வா. அவளுடைய கணவரை மாமான்னுதான் கூப்பிடுவா.

அவர் மேலே ரொம்ப அன்பு வெச்சிருந்தா. ரெண்டு பேருக்குள் என்ன பிரச்னைன்னு தெரியலை. ரொம்பவே பாஸிட்டிவான பொண்ணு,

இப்படி ஒரு முடிவு எடுப்பான்னு கொஞ்சமும் நினைச்சு பார்க்கல, ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் ஒரு பார்லர் ஓப்பன் பண்ணினாள்.

நாங்க எல்லாரும் போய்ட்டு வந்தோம். ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட அவளைப் பார்த்தேன். இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாளே என வருத்தப்பட்டார்.

அபூர்வ ராகங்கள் டீம் ஒரு வாட்ஸ்அப் குரூப் வெச்சிருக்கோம். ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தாங்கன்னு அந்த குரூப்ல எல்லோரும் வருத்தப்பட்டு பேசினோம் எனவும் கூறியுள்ளார்.