வவுனியாவில் தமிழ்மாமன்றத்தின் ஏற்பாட்டில் விபுலானந்தரின் 71 ஆவது நினைவு தினம்!!

375


வவுனியாவில் இன்று(19.07) காலை பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகேயுள்ள சுவாமி விபுலானந்தரின் நினைவுச்சிலையில் அன்னாரின் 71ஆவது நினைவு தினம் நினைவுகூறப்பட்டது.

வவுனியா தமிழ்மாமன்றம் ஏற்பாடு செய்த நினைவு தினத்தில் முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை நினைவுப்பேருரையை தமிழ்மணி அகளங்கன் நிகழ்த்தினார்.



இந் நிகழ்வில் நிகழ்வினை ஏற்பாடுசெய்த தமிழ்மாமன்றத்தின் சார்பில் வைத்தியர் செ.மதுரகன், வவுனியா நகரசபை உறுப்பினர்களான எஸ்.சந்திரகுலங்கம், சு.காண்டீபன், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் எம்.முல்லைக்குமரன், சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தலைவர் தமிழ் மணி அகளங்கன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ்மாமன்ற உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.