வவுனியாவில் டெங்கு ஒழிப்பு விஷேட செயற்றிட்டம்!!

313


வவுனியா நகர்ப்பகுதியில் மாலைவேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன. அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டத்தினை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று மாலை வவுனியா பஜார் வீதியிலுள்ள வியாபார நிலையங்களுக்கு முன்பாகவும், கால்வாய்களுக்குள்ளும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை புகை மூலம் விரட்டியடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.



டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த பொதுமக்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் கோரியுள்ளனர்.