மதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்ட கிரிக்கெட் வீரர் : பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!!

449


இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா மதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்டதாக தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 10 டெஸ்ட் போட்டியிலும், ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளிலும் விளையாடியவர் ஆகாஷ் சோபரா. 40 வயதாகும் ஆகாஷ் சோப்ரா, தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகின்றார்.



இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற ஆகாஷ் சோப்ரா அங்குள்ள ஒரு இந்தியன் ஹோட்டலுக்கு மதிய உணவு சாப்பிட சென்றார். அங்கு 6 உணவுகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்டதற்கு இந்தோனேசியன் ரூபாயில் 606,000 பில் வந்தது. அதோடு வரி எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 7 லட்சம் (இந்தோனேசியன் ரூபாய் 699,930) பில் செலுத்தினர்.

தான் மதிய உணவு சாப்பிட்டதற்கு 7 லட்சம் ரூபாய் செலவழித்ததாக தனது டுவிட்டரில் பதிவு செய்து அனைவரையும் கலாய்த்து ஏமாற்ற நினைத்துள்ளார்.



இந்தோனேசியன் ரூபாய் கணக்கின் படி, ஒரு இந்திய ரூபாய்க்கு – 210 இந்தோனேசியன் ரூபாய்க்கு சமமாம். இதனால் அவர் கட்டிய 7 லட்சம் ரூபாய் பில்லுக்கு வெறும் ரூ. 3,334 இந்திய ரூபாய் தான்.