மனைவியின் மோசமான செயல் : தந்தை தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய 8 வயது மகள்!!

300

கொழும்புக்கு அருகில், ஹங்வெல்ல புஸ்ஸெல்ல ஓயா ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் தொடர்பாக விசாரணைகளை நடத்திய பொலிஸார் குறித்த ஆணின் மனைவியை கைது செய்துள்ளனர்.

இந்த பெண், தான் தகாத உறவு கொண்டுள்ளவருடன் இணைந்து கணவனை கொலை செய்து ஆற்றில் வீசியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஹங்வெல்ல, ஜயவீரகொட பகுதியில் வசித்து வந்த 37 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவனுக்கும், தனக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தாக பெண், பொலிஸாரிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக தன்னுடன் தொடர்பு வைத்திருந்த ஆணுடன் இணைந்து கணவனை கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சடலமாக மீட்கப்பட்டவரின் தாய் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.

கடந்த மாதம் 26ஆம் திகதி தன்னுடன் தொலைபேசியில் உரையாடிய மகன், 27ஆம் திகதி வீட்டுக்கு வருவதாக கூறியதாகவும் தாய் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையத்து விசாரணைகளை நடத்திய பொலிஸார், கொல்லப்பட்ட நபரின் 8 வயதான மகளிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுள்ளனர்.

சம்பவம் நடந்த தினம் இரவு தாய் மற்றும் தந்தைக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. தாயும் தந்தையும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் என மகள் கூறியுள்ளார்.

இதன் பின்னர் தான் உறங்கி விட்டதாகவும், மறுநாள் அதிகாலையும் தாய்க்கும், தந்தைக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதாகவும், தான் எழுந்து பார்க்கும் போது தாயின் கையில் பொல்லு ஒன்று இருந்ததாகவும் மகள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது தாயும் மற்றைய ஆண் நபரும் தந்தையை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றனர் எனவும் மகள் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர்கள் சடலத்தை ஆற்றில் வீசியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பெண்ணும், சம்பந்தப்பட்ட ஆணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மிரிஹான விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.