நடிகை பிரியங்காவின் தற்கொலைக்கு பணம் தான் காரணமா? கணவருடன் நடந்த போட்டி!!

443

பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்த நடிகை பிரியங்கா கடந்த 18 ஆம் திகதி வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிரியங்காவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மதுரையில் உள்ள அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

பிரியங்காவின் மரணத்தில் அவர் கடிதம் எதுவும் எழுதிவைக்காத காரணத்தால், அவரது கணவரிடம் விசாரணை மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது.

இவர்கள் இருவருக்குமிடையே குடும்ப பிரச்சனை அதிகம் இருந்ததாக கூறப்படுவதால், பிரியங்காவின் கணவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பிரியங்கா தனது கணவரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்கள் தவிர, அழகு நிலையம் வாயிலாகவும் வருமானம் ஈட்டியுள்ளார். ஆனால், கணவர் அருண்குமாருக்கு அந்த அளவுக்கு வருமானம் கிடையாது. இதனால், நீ அதிகமாக சம்பாதிக்கிறாயா? நான் அதிகமாக சம்பாதிக்கிறேனா? என இவர்கள் இருவருக்குக்கும் இருந்த போட்டியின் காரணமாக குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

எனவே, பிரியங்காவின் தற்கொலைக்கு பணம் தான் காரணமா? என்ற சந்தேகத்தில் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.