வவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையின் உடல் மீட்பு!!

329

வவுனியா கனகராயன்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று (19.07.2018) மாலை உயிரிழந்த நிலையில் யானையின் எச்சங்களை கனகராயன்குளம் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்

கனகராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள வயலுக்கு நேற்று காலை விவசாயிகள் சிலர் காட்டுப்பகுதிக்கு சென்றிருந்த சமயத்தில் உயிரிழந்த நிலையிலிருந்த யானையின் எச்சங்களை கண்டுள்ளனர்.

இதையடுத்து கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்று இது குறித்த விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த யானை இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

உயிரிழந்த யானையின் சில பாகங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.