வவுனியாவில் சர்வதேச கூட்டுறவாளர் தின விழா!!

568

வவுனியாவில் 96 வது சர்வதேச கூட்டுறவாளர் தின விழா மாவட்ட கூட்டுறவுச்சபை தலைவர் இ.சுப்பிரமணியம் தலைமையில் இன்று (21.07) நடைபெற்றது.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக வவுனியா கூட்டுறவு உதவி ஆணையாளர் இந்திரா சுபசிங்கவும், தேசிய கூட்டுறவுச் சபையின் தலைவர் ஏ.பீரிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின் சிறப்பம்சமாக கூட்டுறவு களஞ்சியம் எனும் நூல் வெளியீடும், கூட்டுறவாளர் பத்திரிகையின் ஐந்தாவது இதழும் வெளியிட்டுவைக்கபபட்டதுடன், மாணவர்களது கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.

அத்துடன் கூட்டுறவாளர்கள் தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற 50 மாணவர்களுக்கு பரிசில்களும் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.