காதலனின் ஆசை வார்த்தைகளை நம்பி வந்ததால் நடுரோட்டில் சாப்பாட்டிற்கு பிச்சை எடுத்த மாணவி!!

316

டார்ஜிலிங்கை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பேஸ்புக் மூலம் காதலித்த காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியே வந்த காரணத்தால் நடுரோட்டில் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

11 ஆம் வகுப்பு படித்து வந்த நிஷா என்ற பள்ளி மாணவிக்கு பேஸ்புக் வாயிலாக இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. அந்த இளைஞனின் ஆசை வார்த்தைகளை நம்பி அந்த பெண், கடந்த ஜனவரி மாதம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, மகள் எங்கே சென்றார் என தெரியாமல் தவித்து வந்தனர்.

பணத்துடன் வெளியேறிய மாணவி அந்த இளைஞனுடன் கேரளா உள்ளிட்ட ஊர்களில் சுற்றித்திரிந்து விட்டு, திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

ஆனால், வேலை தெரியாத காரணத்தால் கம்பெனியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கையிலும் பணம் இல்லாததால் சாப்பாட்டிற்கு பிச்சை எடுக்க தள்ளப்பட்டார் அந்த மாணவி. மேலும் அந்த மாணவியை இளைஞன் அடித்து கொடுமைபடுத்தி வந்துள்ளான்.

இதையடுத்து பக்கத்து வீட்டாரிடம் உதவி கேட்டார் அந்த பெண். அவர்கள் அந்த மாணவிக்கு உணவு வழங்கினர். அவர்களிடம் செல்போன் வாங்கி, தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, தன்னை மீட்கும்படி கெஞ்சியுள்ளார். அதனைத்தொடர்ந்து பதறியடித்து வந்த பெற்றோர் சிறுமியை மீட்டுள்ளனர்.