வவுனியாவில் தரம் 05 மாணவர்களுக்கான இலவச செயலமா்வு!!

396


வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் NDB வங்கி இணைந்து நடத்திய தரம் 05 மாணவர்களுக்கான இலவச புலமைப்பரிசில் பரீட்சை செயலமர்வு நேற்று (21.07.2018) சமூக சேவையாளரும் வெளிச்சம் அறக்கட்டளையின் செட்டிகுளப் பிரிவிற்கான இணைப்பாளருமான த.சிவானந்தராசா (ஜெகன்) தலைமையில் செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் அதிதிகளாக ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர், செஞ்சிலுவைச் சங்கத்தின் செட்டிகுளக கிளையின் தலைவர் திரு.தர்மலிங்கம், வவுனியா NDB வங்கிக் கிளையின் உத்தியோகஸ்தர்கள், முகத்தான்குள பாடசாலை அதிபர் திரு.செல்வராசா, செட்டிகுள பழைய மாணவர் சங்க உறுப்பினர் தர்ஷன்,



பாடசாலை அபிவிருத்தி குழுவின் உப செயலாளர் சிவா, விஜி மொபைல் உரிமையாளர் ரகு, வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன், செயலாளர் தி.கார்த்திக், பொருளாளர் செ.மேனதாஸ் மற்றும் அருள்கரன் போன்றோருடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.