மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி : பார்க்க குவியும் பொதுமக்கள்!!

486


திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மனித உருவில் பிறந்துள்ள ஆட்டுக்குட்டியை பார்க்க ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக கூடி வருகின்றனர்.



துறையூர் அருகே நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவர் வளர்த்த ஆடு ஒன்று சமீபத்தில் இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது.

அதில் ஒரு குட்டி மனித உருவில் இருந்ததால், அக்கம் பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் விரைந்து சென்று அதனை ஆச்சர்யமாக பார்த்துள்ளனர்.



ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அந்த குட்டி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அறிந்து கோவிந்தராஜ் வீட்டிற்கு விரைந்து சென்ற கால்நடை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், கருமுட்டை சரிவர வளர்ச்சி அடையாததே குட்டி மனித உருவில் பிறந்ததற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.