கல் நெஞ்சம் படைத்தவர்களையும் கரைய வைக்கும் கருணாநிதியின் வீட்டில் நடக்கும் காட்சி!!

804


கோபாலபுர இல்லத்தில் கருணாநிதியின் நாற்காலியும், அவருக்கு பூ போடப்பட்டு இருக்கும் படத்தை பார்த்தப்படியே படுத்திருக்கும் அவரின் வளர்ப்பு பிராணி புகைப்படமும் கல் நெஞ்சம் படைத்தவர்களையும் கரையவைத்துள்ளது.



கருணாநிதிக்கு செல்லப்பிராணி என்றால் உயிர். அவரின் கோபாலபுர இல்லம் மற்றும் சிஐடி காலனியிலும் லாசா அப்ஸோ மற்றும் பக் வகை நாய்களை வளர்த்தார்.

அந்த நாய்கள் மீது கருணாநிதிக்கு அலாதியான அன்பு. கோபாலபுரம் இல்லத்தில் லாசா அப்ஸோ நாயுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்து பல தலைவர்கள் பிரமித்து கேட்டுள்ளனர்.



கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கும் போது தினமும் ஒரு முறையாவது அந்த நாய்களை மடியில் வைத்து கொஞ்சுவாராம்.



வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் கருணாநிதி பேச்சு அல்லது வீடியோ வந்தால் அந்த நாய்கள் உடனே ஓடிப்போய் தொலைக்காட்சியில் தெரியும் கருணாநிதிக்கு முத்தம் இடும்.


தினமும் அந்த நாய்களுக்கு தனது கையால் உணவு அளிப்பவர் கருணாநிதி தான். ஆனால், நிரந்தரமாக பிரிந்துவிட்ட கருணாநிதி இனி வரமாட்டார் என்பது இந்த நாய்களுக்கு தெரியாமல் அவரது புகைப்படத்தை பார்த்துக்கொண்டு படுத்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.