வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் 08ஆம் நாள் சப்பர திருவிழா!(படங்கள்,வீடியோ)

562


பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு எட்டாம் நாள் திருவிழா முத்துசப்பர நிகழ்வு  11.08.2018 அன்று  இடம் பெற்றது .

காலை பத்து மணிக்கு மூலஸ்தான பூசை கொடிதம்ப பூசை. தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் கைலாச வாகனத்தில் உள்வீதி வெளி வீதி எழுந்தருளி செய்தாள்.
மீண்டும் மாலை நாலரை மணிக்கு யாகபூசை கும்பபூசை மூலஸ்தான பூசையை தொடர்ந்துஆறுமணியளவில்
#நாதகானசுரபி K.T. பாஸ்கரன் குழுவினர்
#நாதவேந்தன் T. சத்தியகுமார் குழுவினர்
#நாதஸ்வரமணி K. ஜெயரட்ணம் குழுவினர்
#நாதகீதன் K..கோகுலன் குழுவினரின்
விசேட தவில் நாதஸ்வர கச்சேரி சப்பர நிகழ்வின் விசேட அம்சமாக இடம்பெற்றது.

தொடர்ந்து ஏழரை மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது. தொடர்ந்து மாலையில்ஒன்பது மணியளில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் அழகிய முத்து சப்பரத்தில் வீதிஉலா வந்தாள்.விசேடமாக வீதி உலா வந்த சமயம் ஆங்காங்கே வாண வேடிக்கை நிகழ்வுகளும் இடம்பெற்றது.