வவுனியாவில் கிணற்றிலிருந்து 5 வயதுக் குழந்தையும் தாயும் சடலமாக மீட்பு!!

438

வவுனியா கூமாங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு அருகே இன்று (15.08.2018) காலை 10 மணியளவில் தாயும் குழந்தையும் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர்.

கணவன் வேலைக்கு சென்ற சமயத்தில் 5வயது, 7வயதுடைய மகனுடன் தயார் அயலவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில் 5 வயது மகனையும் குறித்த பெண்ணையும் காணவில்லை என குறித்த அயலவரின் வீட்டார் தேடிய சமயத்தில் கிணற்றில் சடலமாக காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

33 வயது தாயும் 5வயதுக் குழந்தையுமே சடலமாக மீட்கப்பட்டதாகவும் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவலை வழங்க முடியுமென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம சேவையாளர், பண்டாரிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.