வவுனியாவில் மின்சாரத்தில் சிக்கிய குரங்கு பரிதாபமாக பலி!!

339


வவுனியா புகையிரத நிலைய வீதியில் செல்லும் லக்ஸ்சபானா மின் வயறில் நடந்து சென்ற குரங்குகளில் ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

புகையிரத நிலைய வீதியில் இன்று காலை லக்சபானா மின்சாரம் பிரதான மின்பிறப்பாக்கிக்குச் செல்லும்  வயறில் நடந்து சென்ற குரங்குகளில் ஒன்று தவறி கீழ் செல்லும் கம்பியில் மின்சாத்தில் சிக்கி உயிரிழந்து கீழே வீழ்ந்துள்ளது.



இவ்வாறு வீதியில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளதையடுத்து நகரசபையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. வங்கியில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்குச் செல்லும் மக்களுக்கு இதனால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.