பிரபல பாடகரை அடித்துக் கொன்ற மகன் : அதிர்ச்சி சம்பவம்!!

354

தமிழகத்தில் மேடைப் பாடகரை இரும்பு கம்பியால் அவரது மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தின் வாலாஜா தென்றல் நகரை சேர்ந்தவர் அசோக் குமார்(வயது 54), இவரது மனைவி தனுஜா குமாரி, இந்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு பிரதீஸ்வரன்(வயது 25), பிரசாத்(வயது 20) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். படிப்பை முடித்த பிரதீஸ்வரன் சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த பிரதீஸ்வரன் சம்பவ தினத்தன்று இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அசோக் குமாருக்கும், தனுஜாவுக்கு சண்டை வந்துள்ளது, இதை பிரதீஸ்வரன் விலக்கிவிட்ட நிலையில், அசோக் குமார் மனைவியை அவதூறாக திட்டியதாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த பிரதீஸ்வரன் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தந்தையை தாக்கியுள்ளார். இதில் சுருண்டு விழுந்த அசோக் குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார்.

நள்ளிரவு 1 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற விரைந்து சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மூவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.