காட்டில் கடுமையாக மோதி கொண்ட புலிகள் : ஒரு புலி மரணம்!!

739

சிங்கராஜ வனத்திற்கு சொந்தமான கலவான காட்டில் இரண்டு புலிகள் கடுமையாக மோதிக் கொண்டுள்ளன.

இதன் காரணமாக ஒரு புலி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 15 வயதான ஆண் புலி ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மோதலில் உயிரிழந்த புலியின் உடலை வன விலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

புலியின் சடலம் நீதிமன்ற நடவடிக்கைக்காக இரத்தினபுரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.