கருணாநிதி நினைவிடத்துக்கு முதல் முறையாக வந்த விஜயகாந்த் : கண்ணீருடன் செய்த செயல்!!

295


அமெரிக்காவில் இருந்து இந்திய திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.



திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த 7-ஆம் திகதி காலமானார். அவரின் உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதி இறந்தபோது நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையில் இருந்தார்.



இந்நிலையில் இன்று அதிகாலை நாடு திரும்பிய விஜயகாந்த் சென்னை விமான நிலையத்திலிருந்து நேராக கருணாநிதியின் சமாதிக்கு சென்றார்.



அங்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதோடு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


முன்னதாக கருணாநிதி மறைவின்போது விஜயகாந்த் அழுதபடி அஞ்சலி செலுத்திய வீடியோ வெளியாகி பலரையும் கண்கலங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.