பறக்கும் விமானத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய நடிகைகள் : அச்சத்தில் உறைந்த பயணிகள்!!

657


கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த விமானம் ஒன்றில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.



ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இலங்கை தொலைகாட்சி நடிகைகளான மஹேஷி மதுஷங்கா மற்றும் தனாஷா ஹதரசிங்க ஆகியோர் பயணித்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முதலாவது அதிகாரியாக சேவை செய்யும் நபருடன் இவர்கள் தங்கள் பயணத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.



இரண்டு நடிகைகளுடன் பயணி போன்று வந்த குறித்த அதிகாரி சிங்கப்பூர் சுற்று பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். எப்படியிருப்பினும் விமானம் பயணித்தது முதல் தரையிறங்கும் வரை குறித்த அதிகாரி இந்த இரண்டு நடிகைகளுடன் விமான கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்துள்ளார்.



விமான கட்டுப்பாட்டு பிரிவிற்கு நுழைவதற்கு வெளிநபர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. அந்த பகுதிக்கு செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


பயணிகளுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் சட்டத்தை மீறி குறித்த நடிகைகளை, தனது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த பிரிவிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இதன் காரணமாக விமானம் தரையிறங்கும் வரையிலும் கட்டுப்பாட்டு பிரிவில் 5 பேர் இருந்துள்ளனர். இரண்டு விமானிகள், குறித்த அதிகாரி மற்றும் இரண்டு நடிகைகள் கட்டுப்பாட்டு பிரிவில் பயணித்துள்ளனர்.


குறித்த பிரிவில் இருந்த நிலையில் குறித்த நடிகைகளுக்கான உணவு உட்பட பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வர்த்தக பிரிவில் இருந்த பயணிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்ட போதிலும், அவர்கள் அவ்வாறு பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.