வவுனியா வைரவப்புளியங்குளத்தில் மோட்டார் சைக்கில் விபத்து : இளைஞன் தப்பியோட்டம்!!

347

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இன்று (20.08.2018) மாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர்.

வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியூடாக மோட்டார் சைக்கிலில் சென்ற இரு பெண் அரச உத்தியோகத்தர்கள் வைரவப்புளியங்குளம் 8ம் ஒழுங்கைக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே வீதியில் அதே வேகமாக வந்த மோட்டார் சைக்கில் அரச உத்தியோகத்தர் சென்ற மோட்டார் சைக்கில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்து இடம்பெற்ற சமயத்தில் அங்கிருந்த நபரொருவர் போக்குவரத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய சமயத்தில் மோட்டார் சைக்கில் விபத்துக்கு காரணமாக இளைஞர்கள் மோட்டார் சைக்கிலை எடுத்துச் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதுடன் குறித்த மோட்டார் சைக்கிலின் இலக்கத்தினை வைத்து விபத்துக்கு காரணமான இளைஞர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வீதியில் இளைஞர்களின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதுடன் பல தடவைகள் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் இப் பகுதியில் பொலிஸ் காவலரணை அமைக்குமாறு தெரிவித்தும் பொலிஸார் அசமந்த போக்காகவே செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.