வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (19.08.2018) ஞாயிறு இரவு தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோவில்குளம்6 ஆம் ஒழுங்கை பகுதியில் உள்ள தனது வீட்டில் இளைஞர் ஒருவர் ஞாயிறு இரவு 12 மணியளவில் தனது அறையினுள் போர்வையைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உறவினர் களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னமே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தில் க.கதிர்செல்வன் (வயது 30) என்ற இளைஞனே மரணமடைந்துள்ளார்.