கேரள வெள்ளம் : மக்களுக்கு உதவாமல் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிய நடிகர்கள் : பதிலடி கொடுத்த துல்கர் சல்மான்!!

366

கேரள வெள்ளத்தில் திரைப்பிரபலங்கள் பலர் இங்கு உதவாமல் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர் என்று கூறப்பட்டதால், அவர்களுக்கு நடிகர் துல்கர் சல்மான் பதிலடி கொடுத்துள்ளார்.

கேரளாவில் பெரு வெள்ளத்தின் காரணமாக மூன்றில் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அதை எல்லாம் சீரமைக்கும் பணியில் அம்மாநில அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

இதற்காக அனைவரிடமும் கேரளா தொடர்ந்து உதவி கேட்டு வருவதால், அம்மாநிலத்திற்கு உதவிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் இந்த வெள்ளத்தின் காரணமாக பெரும்பாலான நடிகர்கள் களத்தில் இறங்கி உதவாமல், பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்துள்ளன.

இதைக் கண்ட நடிகர் துல்கர் சல்மான், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் வேண்டும் என்றால் உடல் ரீதியாக நான் உதவி செய்யாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு தெரியும் நான் உதவி செய்தேனா, இல்லையா? இதை நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.