இணையத்தை கலக்கும் 6 மாத கர்ப்பிணி தாய் : அப்படி என்ன செய்தார் தெரியுமா?

421


சுவிற்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் 36 வார கர்ப்பிணியாக இருந்துகொண்டு துருவ நடனம் ஆடுவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுவிற்சர்லாந்தை சேர்ந்த 31 வயதான கிறிஸ்டினா எண்ணும் பெண், தன்னுடைய தோழி ஒருவர் துருவ நடனம் ஆடுவதை பார்த்து தானும் அந்த நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.



அதன்படி கடந்த 2010 முதல், தனக்கு முதல் மகன் பிறந்ததும், துருவ நடனப்பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.

நாட்கள் செல்லச்செல்ல நடத்தின் மீது இருந்த ஆர்வத்தால், கர்ப்பமடைந்த பிறகும் நடந்ததை தொடர்ந்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து அவர் இன்ஸ்டாகிராம் பதிவிட்டதும், பலரும் வியந்து பார்த்துள்ளனர். அதேசமயம் ஏரளாமானோர் எச்சரித்து அறிவுரை வழங்கியுள்ளார்.



இதுகுறித்து கிறிஸ்டினா கூறுகையில், நான் தற்போது 6 மாத கர்ப்பிணி பெண்ணாக இருக்கிறேன். இப்பொழுதெல்லாம் நான் நடனமாடுவதை பார்த்து, என் பெற்றோர், உறவினர்கள் உட்பட பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.



எங்கே நான் தடுமாறிவிடுவேனோ என்ற அச்சம் அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. எனக்கு இந்த நடனம் ஆடுவது மனஅமைதியை தருகிறது. நான் நடனம் ஆடும்பொழுதெல்லாம் என்னுடைய மகன் உறங்குகின்றான் என தெரிவித்துள்ளார்.


தற்போது 6 மாத கர்ப்பினியாகிவிட்டதால் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு, கிறிஸ்டினா தன்னுடைய பயிற்சி நேரத்தை வாரத்திற்கு 4 மணி நேரமாக குறைத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.