வவுனியாவில் உலக தற்கொலை தினத்தில் விழிப்புணர்வுப் பேரணி!!

533

உலக தற்கொலை தடுப்பு தினமான இன்று தற்கொலையை தடுப்பதற்கு ஒன்றிணைவோம் எனும் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று இன்று(11.09.2018) காலை 10 மணியளவில் உளநலப்பிரிவின் ஏற்பாட்டில் வவுனியா பிராந்திய சுகாதாரப்பணிமனையிலிருந்து ஆரம்பமாகி நகரசபை கலாச்சார மண்டபத்தில் நிறைவடைந்துள்ளது.

இவ்விழிப்புணர்வுப் பேரணியானது மன்னார் வீதியிலுள்ள பிராந்திய சுகாதாரப்பணிமனையில் ஆரம்பமாகி வைத்தியசாலை வீதிவழியாக ஹொறவப்பொத்தான வீதிவழியாக பஸார் வீதியூடாக மணிக்கூட்டுக்கோபுரம் சென்று அங்கிருந்து நகரசபை மண்டபத்தைச் சென்றடைந்து நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் வவுனியா வைத்தியசாலை உளநல சேவைகள் பணிப்பாளர், மாவட்ட அரசாங்க அதிபர் எம். எம்.ஹனீபா, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வி.பசுபதிராஜா, பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள், பொது சுகாதாரப்பரிசோதகர்கள், பொது வைத்தியசாலை உளநல வைத்திய நிபுனர், உத்தியோகத்தர்கள், தாதிய கல்லூரி மாணவர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், கல்வியற்கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், வர்த்தக சங்கப்பிரதிநிதிகள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், வரோட் நிறுவனத்தினர், விஷேட தேவைக்குட்பட்டோர்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.