படுக்கையிலேயே உயிரிழந்த கர்ப்பிணி பெண் : வயிற்றில் இருந்த குழந்தை குறித்து உருக்கமான தகவல்!!

811


பிரித்தானியாவில் படுக்கையில் தூங்கி கொண்டிருக்கும் போதே 14 வார கர்ப்பிணி பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரொசானா சாண்டர்சன் (22) என்ற பெண் கர்ப்பமாக இருந்த நிலையில் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.



சமீபத்தில் கூட வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளார், இந்நிலையில் வீட்டின் படுக்கையறையில் சாண்டர்சன் திடீரென இறந்து கிடந்துள்ளார்.

அங்கு வந்த சாண்டர்சனின் தாய் ஜாக்குலின் தனது மகள் இறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.



இது குறித்து பேசிய ஜாக்குலின், பிரேத பரிசோதனையில் சாண்டர்சனின் வயிற்றில் இருந்தது ஆணா அல்லது பெண் குழந்தையா என்பது தெரிந்துவிடும்.



அதன்மூலம் அதற்கேற்றார் போல நிறத்திலான பூக்களை இறுதிச்சடங்களில் வைப்பேன் என சோகமாக கூறினார்.


மேலும், சாண்டர்சனுக்கு எந்தவொரு நோயும் கிடையாது என கூறிய ஜாக்குலின் அவரின் திடீர் இறப்பு அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.

சாண்டர்சன் இறந்த நிமிடம் குறித்து விளக்கிய ஜாக்குலின், சாண்டர்சன் என்னிடம் நன்றாக தான் போனில் பேசினார், அதன்பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அவர் வீட்டுக்கு போன போது அவர் படுக்கையில் இருந்தார்.


சாண்டர்சனின் விரல் நீல நிறமாக இருந்தது, அவர் தூங்குவதாக முதலில் நினைத்த நிலையில் பின்னர் தான் இறந்தது தெரிந்தது என கூறியுள்ளார்.