வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது : தடுத்து வைக்கப்பட்ட அரச பேரூந்து!!

337


வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று (13.09.2018) அதிகாலை 4.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.



யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்தினை வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே மறித்து பொலிஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பயணப்பையில் கேராள கஞ்சாவினை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் இரணைமடு சந்தியிலிருந்து பேரூந்தில் பயணித்தாகவும் இவரிடமிருந்து மீட்கப்பட்ட கேராள கஞ்சாவின் நிறை மற்றும் பெறுமதி பின்னரே தெரிவிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்தனர்.



இதன் காரணமாக சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பேரூந்து நொச்சிமோட்டை பாலத்தடியில் தரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது.