வெள்ளிப்பதக்கத்துடன் தாயகம் திரும்பிய சாதனை தமிழ்ப் பெண்!!

375


பிரான்சில் நடைபெற்ற சர்வதேச அழகு கலை போட்டியில் வெள்ளி பதக்கத்தை வெற்றி கொண்ட ஜெயபிரகாஷ் கயல்விழி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தார்.



கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

பிரான்சில் நடைபெற்ற சர்வதேச அழகு கலை போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஜெயபிரகாஷ் கயல்விழி இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்திக் கொண்டார்.



பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்த போட்டி கடந்த 10ம் திகதி இடம்பெற்றிருந்ததுடன், அவருக்கான பரிசில்கள் கடந்த 11ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.



இலங்கையில் பிரசித்தி பெற்ற அழகு கலை நிபுணரான ஜெயபிரகாஷ் கயல்விழி, சர்வதேச ரீதியில் பல போட்டிகளிலும் பங்குப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.


சர்வதேச ரீதியில் இடம்பெறும் அழகு கலை போட்டியொன்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாக ஜெயபிரகாஷ் கயல்விழி பதக்கமொன்றை வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.