இப்படியும் ஒரு தமிழர் திருமணம்!!

345

கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழர் திருமணத்தில் எண்ணெயில்லாமல், அடுப்பில்லாமல் சுவையான இயற்கை விருந்து பரிமாறப்பட்டுள்ளது.

திருமணத்தின் முக்கிய அம்சமே விருந்துதான். சுவை என்ற பெயரில் இன்று பரிமாறப்படும் உணவுகள் வேதிப்பொருட்கள் கலந்த உணவுகளாகவே இருக்கின்றன.

இதனால், கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழர் திருமணத்தில் சுவை மிகுந்த இயற்கை உணவுகளை பரிமாறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

எண்ணெயில்லாமல், அடுப்பில்லாமல் உணவுகளை சமைக்கும் கலையில் படையல் சிவா என்பவர் அசத்தி வருகிறார்.

அவல் சாதம், வாழைக்காய் என இயற்கை உணவுகளை பரிமாறியுள்ளனர்.