இலங்கையில் பல ஆண்களை ஏமாற்றி பெண்ணொருவர் செய்த மோசமான செயல்!!

583

வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் கொள்ளையடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, நாரஹென்பிட்டி வைத்தியசாலையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் பெண் காண்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பொலிஸ் காண்ஸ்டபிளும் அவரது கணவரும் இணைந்து நாட்டின் பல பிரதேசங்களில் உள்ளவர்களிடம் வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்துள்ளனர்.

பண்டாரவளையை சேர்ந்த இருவரிடம் 15 லட்சம் ரூபா பணம் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.