வவுனியா பேருந்து நிலையத்தில் அச்சத்துடன் பயணிக்கும் பயணிகள்!!

644


வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் பழமை வாய்ந்த கடை தொகுதியின் மேலுள்ள பகுதி ஒன்று சேதமடைந்து காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் அப்பகுதியில் செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.



பழைய பேருந்து நிலையத்திலுள்ள வியாபார நிலையங்கள் அமைந்துள்ள கட்டடத்தில் மேலுள்ள பகுதிகளிலிருந்து சில பகுதிகள் மக்கள் போக்குவரத்துச் செய்யும் பகுதிகளில் உடைந்து விழுந்து வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நபரொருவர் மீது சிறிய பகுதி விழுந்துள்ளது, எனினும் அதனால் அவருக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை.



இது தொடர்பாக வவுனியா நகரசபையினரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும் இன்று வரையில் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரியவருகிறது.



இதேவேளை, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.