வவுனியாவில் சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞனுக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு!!

520


வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் 15 வயதுடைய சிறுமியை பலாத்காரமாக அழைத்துச் சென்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



இதன்படி குறித்த இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது 15 வயதுடைய மகளுடன் நீண்ட காலமாக நட்பு ரீதியில் பழகி வந்த குறித்த இளைஞன் மகளை பலாத்காரமாக அழைத்துச் சென்று விட்டதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.



இதையடுத்து பொலிஸார் குறித்த சந்தேகநபரை விசாரணைகளுக்காக அழைத்து விசாரணைகளின் பின் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய போதே வவுனியா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.