நிர்வாணமாக தனியறையில் அடைக்கப்பட்ட ஆட்டிஸச் சிறுவன் : கனடாவை அதிர வைத்த செய்தி!!

400

ஆட்டிசக் குறைபாடுடைய சிறுவனை நிர்வாணமாக தனியறையில் பூட்டி வைத்ததால் அதிர்ச்சியுற்ற அவனது பெற்றோர், அவன் பயின்ற பள்ளி மற்றும் கனடாவின் கல்வி அமைச்சர் உட்பட பலர்மீது வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் கனடா கல்வித் துறையை அதிரச் செய்துள்ளது.

Marcy Oakes மற்றும் Warren Henschel ஆகியோர் தங்கள் 12 வயது மகனான Aidanஐ பள்ளியில் அவனது ஆசிரியர்கள் மனநலம் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைகளில் அடைத்து வைப்பதற்கு பயன்படுத்தப்படுவது போன்ற அறை ஒன்றில் அடைத்து வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

அவன் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து அதை இமெயிலில் அவனது பெற்றோருக்கு அனுப்பிய பள்ளி நிர்வாகம், அவனை வந்து அழைத்துச் செய்தி அனுப்பியிருந்தது.

பதறிப்போன அவனது பெற்றோர் வந்து அந்த அறையைத் திறந்து விடச் சொன்னபோது அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

அங்கே அவர்கள் மகன் Aidan நிர்வாணமாக உடலெங்கும் மலத்துடன் பயந்து பதுங்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.

தற்போது அந்த பள்ளி மற்றும் இத்தகைய மோசமான பழக்கத்தை பின்பற்றும் கனடாவின் கல்வித்துறை ஆகியவற்றின் மீது Aidanஇன் பெற்றோர் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இத்தகைய பழக்கத்தை முற்றிலும் அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் கனடாவின் கல்வித்துறையை அதிரச் செய்துள்ளது.