கணவர் ஏழை என்பதால் பிரிந்து சென்ற மனைவி : இரண்டாண்டுகள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி!!

383

கென்யாவில் கணவரை இரண்டாண்டுகளுக்கு முன்னர் மனைவி பிரிந்தநிலையில், கணவர் இரண்டாம் திருமணம் செய்ததற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ராபர்ட் நயாப்வரி என்ற இளைஞர் தனது மனைவி மர்தாவுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2016-ல் மர்தா, ராபர்டை பிரிந்து சென்றுள்ளார்.

ராபர்டின் சொத்துக்கள் அனைத்தும் அடமானத்துக்கு வந்ததால் அவருடன் சேர்ந்து இனியும் வாழமுடியாது என மர்தா பிரிந்து சென்றார்.

இந்நிலையில் இரண்டாண்டுகளுக்கு பின்னர் தற்போது ராபர்ட் தனது குழந்தைகள் நலனுக்காக இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இதை அறிந்த மர்தா இரண்டாண்டுகளுக்கு பின்னர் கணவர் முன்னால் தோன்றி அவரின் இரண்டாம் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த விடயம் பஞ்சாயத்துக்கு போன நிலையில், மர்தா வேண்டுமானால் ராபர்டுடன் சேர்ந்து வாழலாம், ஆனால் அவரின் இரண்டாவது மனைவியும் உடனிருப்பார்.

இதற்கு மர்தா ஒத்து கொள்ளவில்லையெனில் அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பஞ்சாயத்தார் கூறியுள்ளனர்.