ஆண் நண்பர் தொந்தரவு செய்வதாக பிரபல நடிகை புகார்!!

338

சின்னத்திரை நடிகை நிலானி தனது ஆண் நண்பர் மீது சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

தன்மை திருமணம் செய்து கொள்ளும்படி நண்பர் லலித்குமார் தொந்தரவு தருவதாக நிலானி புகார் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து லலித்குமார் தொந்தரவு தருவதாகவும் நிலானி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

இவர் சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சம்பவம் தொடர்பாக படப்பிடிப்பில் பொலிஸ் சீருடையில் இருந்தபடியே, பொலிசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.