திருமணத்தின் போது நடந்த அசம்பாவிதம் : அலறிய உறவினர்கள்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ!!

280

பிலிப்பைன்ஸ் நாட்டில் திருமணத்தின் போது திடீரென புயல் தாக்கியதால், திருமண அரங்கு முழுவதும் கூடியிருந்த உறவினர்கள் அச்சத்தில் பயந்து ஓடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த Randy Manaois (29) மற்றும் அவருடைய தோழி Jennifer (28)-க்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பின்னர் பூங்கோத்தை தூக்கி வீசிவிட்டு, நடனமாட புதுமண தம்பதியினர் ஆயத்தமாகினர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும்போது, பலமான ஒரு சத்தம் கேட்டது.

உடனே விளக்குகள் அனைத்தும் அணைந்து, திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் அலறும் சத்தம் கேட்டது.

இந்த சம்பவம் குறித்து மணமகன் Randy கூறுகையில், எங்களுடைய திருமண நிகழ்வின் போது, இப்படியொரு புயல் தாக்கம் ஏற்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

திடீரென விளக்குகள் அனைத்தும் அணைந்து, ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைத்துக்கொண்டு கீழே விழுந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

இந்த அசம்பாவிதத்திற்காக, திருமணத்திற்கு வந்த உறவினர்களிடம் நான் என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

அந்த சம்பவத்திலிருந்து என்னுடைய மனைவி இன்னும் மீண்டு வர முடியாமல் பயத்திலே உறைந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.