மூக்கில் குத்தி பின்கழுத்தில் வெளியே வந்த ஸ்பூன் : 10 வயது சிறுவன் அதிசயமாக உயிர் பிழைத்தது எப்படி?

463

மரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கீழே விழுந்த போது அவன் முகத்தில் குத்திய முள்கரண்டி பின் கழுத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்தத போதும், அவன் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளான்.

அமெரிக்காவைச் சேர்ந்த சேவியர் கன்னிங்கம் என்ற 10 வயது சிறுவன் மரத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக கீழே விழுந்தான்.

அப்படி கீழே விழுந்த போது, கிழே இருந்த இறைச்சிகளைக் குத்தி சாப்பிட பயன்படுத்தப்படும் முள் கரண்டி மூக்குக்கு மேல் குத்தி பின் கழுத்து வழியாக வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

இதனால் வலியால் துடித்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு சிறுவனுக்கு அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடித்தனர்.

அதில், உடலின் ஒரு பக்கத்தில் குத்தி மறுபக்கத்தில் வெளியே வந்த கரண்டி, அவனது மூளையையோ, முதுகுத் தண்டையோ, கண் பகுதியையோ, முக்கிய நரம்புகள் எதையுமோ சீண்டவே இல்லை.

நூலிழையில் எதையும் தொட்டுக் கொள்ளாமல் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக சிறுவன் உயிர் பிழைத்து, தற்போது குணமடைந்து வருகிறான். இவன் நிச்சயம் கோடியில் ஒருவன் என்று ஆச்சரியத்தோடு கூறியுள்ளனர்.