வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.சபையினர் பணிப்புறக்கணிப்பு!!

326


வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (17.09.2018) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு கீழ் இயங்குவதினால் எமக்கு பாதுகாப்பில்லை, தூரசேவை பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்திற்குள் செல்வதற்கு அனுமதி கோரியும் நேற்றைய தினம் தனியார் பேரூந்து சங்க ஊழியர், உரிமையாளரினால் இ.போ.ச நடத்துனர் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



இப் பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச, தனியார் ஊழியர்கள் பருவகால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

புதிய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார் பேரூந்துகள் அதிகளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.