இளைஞரொருவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற இராணுவ வீரர்கள்!!

205


திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார்.



மொறவெவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ பேருந்து மற்றும் இராணுவ ட்ரக் என்பன பயணித்துக் கொண்டிருந்த போது முந்திச் செல்ல முற்பட்ட நிலையில் இளைஞரின் மோட்டார்சைக்கிள் மாடொன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.



சம்பவத்தில் கந்தளாய், ரஜயல பகுதியை சேர்ந்த கே.எம்.பி.ஜி.ஈஸான் (22 வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.



படுகாயமடைந்த இளைஞனை இராணுவ வீரர்களே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.