குட்டிகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து நாகப்பாம்புடன் ஆக்ரோஷமாக சண்டைபோட்ட நாய்!!

402

ஒடிசா மாநிலத்தில் தன் குட்டிகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பாம்புடன் சண்டைபோட்ட நாயின் பாசப்போராட்டம் சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

விஜய்பரிட்டா என்பவரின் வீட்டின் மாடிப்படிக்கு கீழே தனது 7 குட்டிகளை பராமரித்துக்கொண்டு நாய் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று அங்கு நுழைந்த நாகப்பாம்பு குட்டிகளை சீண்டியுள்ளது. அதை பார்த்த தாய், பாம்புடன் சண்டைபோட்டு அதனை விரட்ட முயன்றது.

நாயின் ஆக்ரோஷமான சத்தத்தை கேட்டு அங்கு ஓடிவந்த மக்கள், இந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளனர். இந்த சண்டையின் இறுதியில் தாய் நாய்க்கு வெற்றி கிடைத்தது. ஆனால் பாம்பு தீண்டியதில் இரு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தது. இருப்பினும் 5 குட்டிகளை போராடி தாய் மீட்டுள்ளது