வவுனியாவில் காட்டு யானை தாக்கி வயோதிபர் பரிதாபமாக உயிரிழப்பு!!

436


வவுனியா சேமமடு பகுதியில் இன்று(20.09) வயோதிபர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த ஆரோக்கியநாதன் ஞானசீலன் என்ற 50 வயதுடைய வயோதிபர் சேமமடு படிவம் 2இல் தனது சகோதரனின் விவசாயக்காணியில் நிலக்கடலை பயிரிட்டு வந்துள்ளார்.



இன்று காலை அப்பகுதியில் தனது மாட்டைத்தேடி காட்டுக்குச் சென்றபோதே காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காலையிலிருந்து நீண்டநேரமாக காணவில்லை என்று தெரிவித்து உறவினர்கள் இன்று மாலை 3 மணியளவில் சேமமடுவில் தேடிச்சென்றபோது காட்டுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



இச்சம்பவம் குறித்து ஓமந்தைப் பொலிசார் மற்றும் கிராம அலுவலருக்குத்தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற ஓமந்தைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.