நடிகை நிலானி தற்கொலை முயற்சி : காரணமானவரின் பெயரை வெளியிட்டதால் பரபரப்பு!!

535


நடிகை நிலானி அவரது வீட்டில் கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை நிலானி தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறி அவரது காதலரும், உதவி இயக்குனருமான காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்தார்.



காந்தி மோசமானவர் என்பதால் தான் அவரை பிரிந்தேன் என நிலானி விளக்கமளித்தார். இந்நிலையில் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வீட்டில் தங்கியிருக்கும் நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து நிலானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காதலன் காந்தி இறப்புக்கு தானே காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியதால் அவர் மனம் உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



இதனிடையில் தற்கொலை முயற்சிக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நிலானி, என்னை மேலும் மேலும் காயப்படுத்தாதீர்கள்.



என் மீது தவறு இருந்தால் புகார் கொடுங்கள், பெண் என்றும் பாராமல் இப்படி செய்கிறீர்கள். மேற்கொண்டு என் மீது அவதூறான பேச்சு பேசினால் என் சாவுக்கு காரணம் ரகு மற்றும் அவர் குடும்பம் தான் கூறியுள்ளார்.