திருமணமான 5 மாதத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : சோகத்தில் குடும்பத்தினர்!!

578

ஒடிசா மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான 5 மாதத்தில் 19 வயது இளம்பெண் உயிரிழந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம் Balasore அருகே 19 வயதான ஊர்மிளா என்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஊர்மிளா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஊர்மிளாவின் பெற்றோர், Simulia காவல் நிலையத்தில், ஊர்மிளாவின் கணவர் நரகரி (26) மற்றும் அவருடைய அம்மாவின் மீது புகார் கொடுத்தனர்.

அதில், திருமணம் செய்து கொடுக்கும் போதே, அவர்கள் கேட்ட வரதட்சணையை நாங்கள் கொடுத்து விட்டோம். ஆனால் திருமணம் முடிந்த பின்னரும் அவர்கள் தொடர்ந்து எங்களுடைய மக்களிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.

எங்களுடைய மகளின் தீக்குளிப்பு சம்பவத்தில் சந்தேகம் உள்ளது. அவர்கள் தான் வேண்டுமென்றே கொலை செய்ய முயற்சித்திருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊர்மிளா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக தற்போது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.