கல்லூரி மாணவியை திருமணம் செய்த 17 வயது சிறுவன் : பின்னர் நடந்த சம்பவம்!!

351

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், கல்லூரியில் பயிலும் மாணவியை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவர், தனது மகளை கெங்கலமகாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கடத்தி திருமணம் செய்து கொண்டதாகவும், தன் மகளை மீட்டுத் தருமாறும் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த இளம்பெண்ணை மீட்க சென்ற பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். அதாவது புகார் கூறப்பட்ட நபர் 17 வயது பள்ளி மாணவன் என்பதும், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவி என்பதும் தெரியவந்தது.

அதன் பின்னர், நடந்த விசாரணையில் இருவரும் கடந்த 31ஆம் திகதியே திருமணம் செய்து, குடும்பம் நடத்தியுள்ளனர் என்பது தெரிய வந்தது.

இந்நிலையில், நடந்த நீதிமன்ற விசாரணையில் 17 வயது சிறுவனை, கல்லூரி மாணவி சட்டத்திற்கு புறம்பாக திருமணம் செய்து கொண்டதாலும், இளம்பெண்ணுடன் சிறுவன் பாலியல் உறவு கொண்டதாலும் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டது.